பில்லா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அண்ணா நூலக அரங்கில் தடை!
பில்லா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அண்ணா நூலக அரங்கில் தடை!
அஜீத்தின் பில்லா-2 படம் வருகிற 13-ந்தேதி ரிலீசாகிறது. இதன் டிரெய்லரை நடிகர், நடிகைகளை வைத்து பிரம்மாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிடப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று மாலை 6 மணிக்கு இவ்விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் போன்றோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டன.
ரஜினி, கமல் போன்றோர் இவ்விழாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அஜீத்துடன் படத்தில் நடித்த கதாநாயகி பார்வதி ஓமனகுட்டன் மற்றும் சக நடிகர், நடிகைகளும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது.
அஜீத் ரசிகர்கள் வழி நெடுக கொடி தோரணம், கட் அவுட் என வரவேற்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். ஆனால் திடீரென இவ் விழா ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே அண்ணா நூலக அரங்கில் இதுபோன்ற பட விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் நேற்று ஐகோர்ட்டில் அண்ணா நூலக அரங்கில் திருமணங்களை நடத்த அரசு அனுமதிப்பதாகவும் இதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இதனை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது திருமண விழாக்களை நூலக அரங்கில் நடத்த அரசு அனுமதிக்காது என்று அரசு வக்கீல் உத்தரவாதம் அளித்தார்.
இந்த சர்ச்சை காரணமாக நேற்று அங்கு நடைபெற இருந்த பில்லா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விழா ரத்து செய்யப்பட்டது. பில்லா-2 டிரெய்லரை நேற்று இரவு விழா நடத்தாமலேயே வெளியிட்டு விட்டனர்.
Post a Comment